இடர் வலயங்கள் தவிர ஏனைய இடங்களில் புதன்கிழமை வரை ஊரடங்கு

இடர் வலயங்கள் தவிர ஏனைய இடங்களில் புதன்கிழமை வரை ஊரடங்கு-Curfew Until Apr 01-PMD

- இடர் வலயங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில்
- ஊரடங்கு மக்கள் நலனுக்காகவே பொறுப்புடன் செயற்படுங்கள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று, மார்ச் (30) பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 01, புதன்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும். பின்னர் அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...