அசாத் சாலி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் இன்று (23) ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.


Add new comment

Or log in with...