மொபிடெல் நிறுவனத்தின் உபஹார பெக்கேஜ் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்ததை அடுத்து மொபிடெல் நிறுவனம் உபஹார பெக்கேஜ் திட்டத்தை ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கி வருகிறது.
மொபிடெல் உபஹார பெக்கேஜ் திட்டத்தின் பதினைந்தாம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி அரச ஊழியர்கள், ஓய்வு நிலையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளுடன் வழங்கப்படும் உபஹார பெக்கேஜ் திட்டத்தை ஊடகத் துறையினருக்கும் வழங்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார். இதனையடுத்து ஆணைக்குழு விரைவாக செயல்பட்டு ஊடகவியலாளர்களுக்கு உபஹார பெக்கேஜ் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மொபிடெல் உபஹார பெக்கேஜ் திட்டத்தில் ஊடகவியலாளர்கள் இணைய தேசிய அடையாள அட்டை மற்றும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை ஆகிய இரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஊடகவியலாளர் இரு இணைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும். இப் பெக்கேஜ் இணைப்புகளைப் பெற்றுக் கொள்ள அருகிலுள்ள எஸ்.எல்.டி. மொபிடெல் கிளை அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் ஊடகத்துறையினர் பெற்றுக் கொள்ள முடியும்.
வட கொழும்பு தினகரன் நிருபர்