Friday, April 26, 2024
Home » சமூக ஊடகங்களில் அவதூறு சந்தேக நபர் CIDயால் கைது

சமூக ஊடகங்களில் அவதூறு சந்தேக நபர் CIDயால் கைது

4,00,000 ரூபா பணமும் கைப்பற்றல்; அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

by damith
February 12, 2024 8:45 am 0 comment

சமூக ஊடகங்கள் மூலம் அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தொடர்பிலும் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரமுகர் ஒருவரது ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் சேறுபூசும் வகையில் இந்த அவதூறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்தமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT