உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்துள்ளார்.
HNDE கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரியின் செயலாளரிடம் செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்துள்ளார்.