அரச வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர்கள் குறைபாடுகளை நிறைவு செய்யும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மாணவர் தாதி பயிற்சி நெறிக்கு பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்த பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்புக்காக சுமார் 3863 விண்ணப்பதாரிகள் சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாதி பயிற்சி நெறிக்காக கடந்த செப்டம்பர் மாதம் பதினைந்தாம் திகதிய அரச வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பன்னிரண்டு நிலையங்களில் குறிப்பிட்ட தினங்களில் இடம்பெற்று வருகின்றன. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை கொழும்பு சுகாதார அமைச்சில் இடம்பெறுகின்றது. ஏனைய மாவட்டங்களின் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகப் பரீட்சை குறிப்பிட்ட மாகாணங்களின் தலை நகரங்களில் அமைந்துள்ள தாதி பயிற்சி பாடசாலைகளில் இடம்பெறுகின்றன.a
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)