Friday, April 26, 2024
Home » திருகோணமலையில் பட்டிமன்ற நிகழ்வு

திருகோணமலையில் பட்டிமன்ற நிகழ்வு

by damith
January 1, 2024 5:56 am 0 comment

திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த பட்டிமன்ற நிகழ்வு (28) வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாசகர் வட்டத்தின் தலைவர் சரவணப ஆனந்தம் திருச்செந்தூரன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர், சிறப்பு விருந்தினராக சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன், கௌரவ விருந்தினராக தமிழகத்தின் முன்னணி பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பட்டிமன்றத்தை நடுவராக தலைமையேற்று கலையமுதன் நடாத்தியிருந்தார்.

இந்நிகழ்வில், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் கலாநிதி செ.ஞானராசா, அதிபர் சந்திரகலா, கவிஞர் பவித்ரன், கவிச்சுடர் சிவரமணி, செல்வி பாத்திமா தாஹிரா முஹம்மது சித்தீக் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT