Friday, April 26, 2024
Home » மட்டக்களப்பில் வெள்ளத்தால் 1,432 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் வெள்ளத்தால் 1,432 குடும்பங்கள் பாதிப்பு

by Gayan Abeykoon
December 21, 2023 6:06 am 0 comment

ற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மழை வெள்ளம் காரணமாக 1,432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்தது.

கோரளைப்பற்று தெற்கு கிரானில் 941 குடும்பங்களும் போரதீவுப்பற்று வெல்லவெளியில் 92 குடும்பங்களும் கோரளைப்பற்று வடக்கு வாகரையில் 319 குடும்பங்களும் ஏறாவூர்ப்பற்று செங்கலடியில் 32 குடும்பங்களும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளையில் 47 குடும்பங்களும் மண்முனைப்பற்று ஆரையம்பதியில் ஒரு குடும்பமும் காத்தான்குடியில் ஒரு குடும்பமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்தது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT