293
இரத்தினபுரி மாவட்டத்தில் பல இடங்களிலும் தற்போது பெய்து வரும் தொடர் மழை மற்றும் பச்சை தேயிலை கொழுந்து உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்டத் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையால் தேயிலை தோட்ட தொழிற்சாலைகளின் சொந்நக்காரர்கள் உட்பட இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகள் பின்னடைவுக்கு உட்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தி செலவு குறையும் வகையில் பசளை வகைகளின் விலைகளை மேலும் குறைக்குமாறும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்