Friday, April 26, 2024
Home » தேயிலை கொழுந்து உற்பத்தி சரிவால் தொழில்துறையினர் பாதிப்பு

தேயிலை கொழுந்து உற்பத்தி சரிவால் தொழில்துறையினர் பாதிப்பு

by Prashahini
December 19, 2023 9:43 am 0 comment

இரத்தினபுரி மாவட்டத்தில் பல இடங்களிலும் தற்போது பெய்து வரும் தொடர் மழை மற்றும் பச்சை தேயிலை கொழுந்து உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்டத் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையால் தேயிலை தோட்ட தொழிற்சாலைகளின் சொந்நக்காரர்கள் உட்பட இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகள் பின்னடைவுக்கு உட்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தேயிலைக் கொழுந்தின் உற்பத்தி செலவு குறையும் வகையில் பசளை வகைகளின் விலைகளை மேலும் குறைக்குமாறும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT