முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தில் மு.யோகபுரம் மகாவித்தியாலயம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது. அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 55 மாணவர்கள் தோற்றி 48 மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரக் கூடியவகையில் சித்தியடைந்தள்ளனர்.செல்வி புவனநாயகம் கார்விழி, செல்வி சசிகுமார் அட்சயா, செல்வன் தேவசுதன் மகிழவன், செல்வன் கேதீஸ்வரன் வாணுஜன் ஆகிய 04 மாணவர்களும் 9A சித்தியினை பெற்றுள்ளனர்.
செல்வி ரஞ்சன் பிறைவிழி 8A, B சித்தியினை பெற்றுள்ளதோடு 7A 2B சித்தியினை செல்வன் ரஜிந்தன் மலராஜிதன் 7A 2Bயும் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். இவர்களுடன் இணைந்த ஏனைய 42 மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது மடடுமல்லாமல் அண்மையில் வெளியாகிய உயர்தர பரீட்சையில் இப்பாடசாலை மாணவர்கள் மூவர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இவ்வருடம் இதுவரையும் 9 மாணவர்கள் பல்கலைக்கழகம் தொிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)