பேருவளை, சீனன்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையிலிருந்து 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் ஒன்பது மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.சி. இப்றாஹீம் தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் அஹமட் அதீப் 164, எம்.ஆர்.எம். அம்ஹர் 160, எம்.எஸ். சாஹிட் ஜுனைத் 159, எம்.ஐ. ராயிட் ஸலாஹ் 154, எம்.எஸ். எம். சஸான் சியான் 151, எம்.எப்.எம். ஆகித் 150, எம். ஐ.எம். மஹ்தி 150, அம்மார் அஹமட் 149, எம்.ஆர்.எம். அப்ஸல் 147 ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்து பாட சாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அஜ்வாத் பாஸி