இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரிவு 2 போட்டியின் இறுதிப் ஆட்டத்தில் ஏறாவூர் யங் அல் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் கிழக்கு மாகாண சம்பியனாக வெற்றியீட்டியது.
அண்மையில் அம்பாறை உகன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் அல் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் அம்பாறை கிமுதுராவ ஈகிள் கழகத்துடன் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாறை கிமுதுராவ ஈகிள் அணியினர் 39.2 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய ஏறாவூர் யங் அல் ஹீரோஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தனர்.
இப்போட்டியின் போது பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட முகம்மட் பாசில் ஆட்ட நாயகனாக தெரிவானார்.
தொடர்ச்சியாக நான்காவது முறையாக மாகாண சம்பியனாக ஏறாவூர் யங் அல் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தப்பது.
ஏறாவூர் சுழற்சி நிருபர