Friday, April 26, 2024
Home » தும்பிக்கை வெட்டப்பட்ட நிலையில் யானையின் தலை மீட்பு

தும்பிக்கை வெட்டப்பட்ட நிலையில் யானையின் தலை மீட்பு

- தலையுடன் ஒரு காதும் துண்டிப்பு

by Prashahini
November 15, 2023 10:09 am 0 comment

யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு தும்பிக்கை அகற்றப்பட்ட யானையின் தலை வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் வீசப்பட்டுள்ளது.

யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓயாவில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யானையின் தலையுடன் ஒரு காது மாத்திரம் காணப்படுகின்றது. மற்றைய காது துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை வேறொரு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்டு கிரிந்திஓயாவில் போடப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுவரை யானையின் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட தலை மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் யானையின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT