நாட்டின் பல பகுதிகளில் முச்சக்கரவண்டிகளை திருடி வந்த சந்தேக நபர்கள் மூவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடந்த 12ஆம் திகதி மாலை ஹோமாகம பொலிஸ் பிரிவின் பிட்டிபத்த தெற்கு பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது நாட்டின் பல பகுதிகளில் முச்சக்கரவண்டிகளை திருடி வந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன் மஹரகம பகுதியில் திருடிய முச்சக்கர வண்டி இரண்டையும் ஹொரணை பகுதியில் திருடிய முச்சக்கர வண்டி ஒன்றையும் பண்டாரகம பகுதியில் திருடிய முச்சக்கர வண்டியினை உதிரிப்பாகங்களாக களட்டப்பட்ட நிலையில் கைப்பற்றியுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக 20 கிராமும் 750 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருட்களையும் ஹோமாகம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 28,33,39 வயதுடைய பிட்டிபன தெற்கு ஹோமாகம பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசா ரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்