இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடிக்கு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவரை, அப்பகுதி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் பதுங்கியிருக்கும் நோக்கில்,இவர்கள் முயற்சித்ததாக தெரிய வருகிறது. அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி சென்ற நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். —–
தனுஷ்கோடி – அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடந்த (11) காலை அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் இராமேஸ்வரம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.இவரை மடக்கிப் பிடித்து விசாரணை
செய்கையில், முன்னுக்கு பின் முரணாக தகவல் வழங்கியுள்ளார்.
இதில், சந்தேகமடைந்த பொலிஸார் மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல் துறையை சேர்ந்த ஜெயராசா என தெரியவந்ததுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவ முயற்சித்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.