265
பலஸ்தீன் காஸாவில் அமைதியும் சமாதானம் வேண்டி பலஸ்தீன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கடந்த (13) வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் விஷேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஜும்ஆ தொழுகையின் பின்னர் இந்த விஷேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற விஷேட துஆ பிரார்த்தனையை மெளலவி எம்.வை.செயினுதீன் மதனி நடாத்தினார். இந்த துஆப் பிராரத்தனையில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
இதேநேரம் தினமும் ஐந்து நேர தொழுகைகளிலும் குனூத் ஓதப்பட்டு விஷேட பிரார்த்தனைகளும் இடம்பெற்று வருகின்றன.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்