தியத்தலாவை கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால்ல் இன்று (22) உத்தரவிட்டார்.
தியத்தலாவை Fox Hill Super Cross கார் பந்தயத்தில் கலந்து கொண்டு பந்தய இலக்கம் 5இன் கீழ் போட்டியிட்ட மாத்தறை மெதபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரஞ்சித் உடுவிட்ட, பந்தய இலக்கம் 196இன் கீழ் போட்டியிட்ட பேராதனை மாகந்த பிரதேசத்தை சேர்ந்த ஏ.எம்.டிலான் சஞ்சீவ ஆகிய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
UPDATE: தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு