Home » பணம் இல்லாததால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை

பணம் இல்லாததால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை

by sachintha
March 30, 2024 6:36 am 0 comment

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பணம் இல்லாததால் எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென, இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசத்தில் ஏதாவதொரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுமாறு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் தேர்தலில் போட்டியிட தேவையான பணம் தன்னிடம் இல்லாததால், அதனை மறுத்துவிட்டதாகவும், அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

”பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகியவற்றில் ஏதாவதொரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.

இது தொடர்பாக ஒரு வாரமும் 10 நாட்கள் நன்றாக சிந்தித்துவிட்டு, பின்னர் முடியாதென பதில் அளித்தேன். தேர்தலில் போட்டியிடுவதற்கான பணம் என்னிடம் இல்லை. இதேவேளை எனக்கும் ஆந்திராவா அல்லது தமிழ்நாடா என்ற பிரச்சினை உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT