சபுகஸ்கந்த மாபிம பகுதியிலுள்ள தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாய்க்குள் ஹை பிரஷர் காற்றுக் குழாயை பிடித்து அழுத்தியதன் காரணமாக அந்த ஊழியர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இருவர் சப்புகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (25) அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள், விளையாட்டாக அந்த ஊழியரின் ஆசனவாயில் ஹை பிரஷர் காற்றுக் குழாயை அழுத்திப் பிடித்துள்ளனர். அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) இரவு உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.