‘வாழ்வு சுமந்த வலி’ நூல் வெளியீட்டு விழா, திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.
கரவை. மு.தயாளனின் ‘வாழ்வு சுமந்த வலி’ நூல் வெளியீட்டு விழா, அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் நிலாவெளியூர் கெஜதர்மா, ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன், வைத்தியர் சி.ஹயக்கிரிவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நூலின் முதல் பிரதியை வைத்தியர் ஹயக்கிரிவன் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஏனைய பிரதிகளை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய வட்ட ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.
கிண்ணியா தினகரன் நிருபர்