88
மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (29) வியாழக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே புத்தம பகுதியிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த போது விபத்திற்குள்ளானது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இந்த பஸ்வண்டி சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்தது. விபத்தில், மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.