Sunday, May 19, 2024
Home » இலங்கையில் முதல் முறையாக ரூபவாஹினியில் ‘AI’ மூலம் செய்தி வாசிப்பு

இலங்கையில் முதல் முறையாக ரூபவாஹினியில் ‘AI’ மூலம் செய்தி வாசிப்பு

by Rizwan Segu Mohideen
May 7, 2024 6:28 am 0 comment

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி, செய்தியை ஒளிபரப்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 8.00 மணி செய்தியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT