Sunday, May 19, 2024
Home » பரீட்சை எழுத முன்னர் ஆலயம் சென்ற மாணவன் திடீர் மரணம்

பரீட்சை எழுத முன்னர் ஆலயம் சென்ற மாணவன் திடீர் மரணம்

by Prashahini
May 7, 2024 8:53 am 0 comment

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்தார். பலாங்கொடை பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரினாத் ரஞ்சித் குமார் என்ற மாணவனே, நேற்று (06) இவ்வாறு உயிரிழந்தார். மயங்கி விழுந்த மாணவன் மரதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாரதென்னையை சேர்ந்த மாணவன் ஹரிநாத் ரஞ்சித் குமாரின் திடீர் மறைவுச் செய்திச் செய்தியை கேள்வியுற்றவுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் விஜயம் செய்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT