Monday, April 29, 2024
Home » முன்னாள் இராணுவ பதவி நிலை பிரதானி ஐ.ம.ச. உடன் இணைவு

முன்னாள் இராணுவ பதவி நிலை பிரதானி ஐ.ம.ச. உடன் இணைவு

- கட்சியின் ஊழல் எதிர்ப்பு கொள்கைப் பிரிவு பிரதானியாக நியமனம்

by Rizwan Segu Mohideen
February 23, 2024 1:34 pm 0 comment

இலங்கை இராணுவத்தின் 54 ஆவது பதவி நிலை பிரதானியாக கடமையாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று (23) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இவரை, கட்சியின் ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவு பிரதானியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் அவர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று தசாப்த யுத்தத்தில் பாரிய பங்களிப்பைச் செய்த அவர், இராணுவத் தளபதியாக பணியாற்றுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படையின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT