Monday, April 29, 2024
Home » விமானப்படையின் 73 வருட விழா வடக்கில் பல வேலைத்திட்டங்கள்

விமானப்படையின் 73 வருட விழா வடக்கில் பல வேலைத்திட்டங்கள்

ரூ, 25 மில்லியனில் 73,000 புத்தகங்கள் அன்பளிப்பு

by damith
February 19, 2024 9:30 am 0 comment

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வடக்கில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 73 பாடசாலைகள், சுமார் நூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் மார்ச் (06) முதல் (10) வரை எயார் டெட்டோ- 2024 என்ற மாபெரும் தொழில்நுட்ப மற்றும் கல்வி கண்காட்சி இடம் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆம் ஆண்டு நிறைவு எதிர்வரும் மார்ச் மாதம் 02 இல்,கொண்டாடப்படுகிறது.

ஸாதிக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT