நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள 80 அரசியல் கட்சிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழு தலைவரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர்.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதுடன், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளது. தேர்தல்கள், வாக்காளர் பதிவு தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இச்சந்திப்பு இம்மாதம் 27 அல்லது மார்ச் மாதம் 06 இல், நடைபெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.