வெலிகம மற்றும் வெலிப்பிட்டி பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று வெலிகம பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம் பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், நாளாந்தம் சேறும் குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணல், சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள், குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இதில் வெலிகம மற்றும் வெலிப்பிட்டிய பிரதேச செயலாளர்கள், சபாநாயகரின் இணைப்புச் செயலாளர் பி. குமஸாரு , வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குறிப்பிட்ட சகல பிரிவுகளுக்கான அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வெலிகம தினகரன் நிருபர்