151
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று பாணந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் இரண்டு பொலிஸார் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸாரையே இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.பாணந்துறை வலான பாலத்துக்கருகில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸாரே தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.