Home » உரிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல்

உரிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல்

- பொதுத் தேர்தல் அடுத்த வருடம்; 2025 பட்ஜட்டில் நிதி

by Rizwan Segu Mohideen
February 13, 2024 3:40 pm 0 comment

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதிக்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வருடம் இடம்பெறும் பொதுத் தேர்தலுக்கான நிதி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுக்கு உரியது எனவும், தேவையான வேளையில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என, ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2024 இல் ஜனாதிபதி – பாராளுமன்ற தேர்தல்கள் கண்டிப்பாக நடத்தப்படும்

தேர்தல் செலவுகளுக்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது!

அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT