Monday, April 29, 2024
Home » மேற்கு அவுஸ்திரேலியாவில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

by Rizwan Segu Mohideen
February 10, 2024 9:28 pm 0 comment

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு இன்று (10) விஜயம் செய்தார்.

தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பின்னர், கொன்சியூலர் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான பங்களிப்பு குறித்தும் விரிவான கவனம் செலுத்தப்பட்டது.

கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி, துணைத் தூதரகம் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT