Sunday, May 5, 2024
Home » அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக் கழகத்துக்கு நிதியுதவி

அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக் கழகத்துக்கு நிதியுதவி

இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் வழங்கினார்

by mahesh
February 7, 2024 1:00 pm 0 comment

மண்முனை, அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக்கழகத்தின் மைதான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு முதற்கட்டமாக 3 இலட்சம் ரூபா நிதி உதவியை கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் வழங்கி வைத்தார்.

தமக்கு பிரத்தியேக மைதானம் இன்மை தொடர்பாக அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக்கழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்தே இந்த நிதி உதவியை இராஜாங்க அமைச்சர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச கிளைத் தலைவர் காமராஜ், பிரதேசக் கிளை செயலாளர் குகநாதன், அரசியல் துறைச் செயலாளர் சபேசன், சுதந்திரம் விளையாட்டுக்கழக தலைவர் இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT