158
திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் 35 பேருக்கு 35 கடற்றொழில் படகுகள் அல் ஹிக்மத்துல் உம்மா பவுண்டேஷனால் இலவசமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வழங்கி வைக்கப்பட்டன. மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் வசித்து வரும் கடற்றொழிலாளர் குடும்பங்களே இந்த உதவித் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது மூதூர் பிரதேசத்தில் 11 கடற்றொழிலாளர்களுக்கும் கிண்ணியா பிரதேசத்தில் 24 கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தோப்பூர் தினகரன் நிருபர்