கொழும்பு, ஸாஹிரா கல்லூரியின் 100ஆவது ஆண்டு ரக்பி நிறைவை கொண்டாடும் வகையில் 14 பாடசாலை அணிகள் பங்கேற்கும் செவன்ஸ் ரக்பி தொடர் ஒன்றை நடத்தவுள்ளது.
1924 ஆம் ஆண்டு ஸாஹிரா கல்லூரியின் ரக்பி விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த ஆண்டில் நூற்றாண்டை பூர்த்திசெய்யும் நிலையில் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் நடைபெறவுள்ள ரக்பி தொடரில் வெளிநாட்டு பாடசாலைகளும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதனையொட்டி அண்மையில் ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், பிரதம அதிதியாக அவுஸ்திரேலிய ரக்பி வீரர் டேவிட் காம்பேஸ் பங்கேற்றிருந்தார்.
இதன்போது டயமண்ட் பெஸ்ட் புட் நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹமட் அலி அனுசரணை காசோலையை ஸாஹிரா கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரிக்காரிடம் கையளித்தார்.