167
தெற்கு நோக்கி பயணிக்கும் கரையோர ரயில்கள் நாளை 04ஆம் திகதி கொழும்பு கோட்டையிலுள்ள செயலக தரிப்பிடம் மற்றும் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தப்படமாட்டாதென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு நடைபெறவுள்ளதால் நாளை காலை 5.00 மணி முதல் காலை 9.00 மணிவரை ரயில்கள் நிறுத்தப்படமாட்டதென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.