இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை விரைவில் நடத்துமாறு கட்சியின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஏ,சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முன்மொழிவுகள் பெறப்பட்டன. இதற்கமைய அதில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான நிபந்தனைகள் கடுமையாக இருந்தன. இதனால் கொடுப்பனவுகளை பெறத்தவறி யோர், இம்முறை விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 1,700,000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.