Sunday, April 28, 2024
Home » புத்தளத்தில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

புத்தளத்தில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

by damith
January 29, 2024 5:55 am 0 comment

புத்தளம் ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. நகர் சிட்டி போய்ஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (26) வை.எம்.எம்.ஏ. நகர் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

பரீட்சையில் சித்தி பெற்ற மாணவ மாணவிகளோடு புனித அல்குர்ஆனை மனனம் செய்த 03 ஹாபிழ்களுக்கும் சேர்த்து இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, ரத்மல்யாய 618/B கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராமத்திலும் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடு இன்றி 60 மாணவ மாணவிகள் தங்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முனாஸ், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் நகுலன், சமூக சேவையாளர் ஏ.எல்.எம். ஹமாசி, பொறியியலாளர் பாசில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT