பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஒரு மாத காலத்தில் 40, 590 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் 38,225 பேரையும் பாதுகாப்பு பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ள பட்டியலிலுள்ள சந்தேக நபர்கள் 2365 பேரையும் கைது செய்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 38 ஆயிரத்து 225 பேர்களில் 1,703 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 1867 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்