ஒவ்வொரு வர்த்தகரும் நாமும் சிறிய அல்லது கூடுதல் வற் வரியை செலுத்தினால் வற் வரியின் சுமையை குறைக்க முடியுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பாணந்துறையில் சரசவி புத்தக நிலையத்தின் புதிய கிளையை நேற்று (18) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அனைவரும் வற் வரி செலுத்தினால் வரி செலுத்தும் சதவீதம் குறையும், அதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் என்றார். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து புத்தகங்கள் எழுத விரும்பும் எழுத்தாளர்களிடையே அரசியல் சாராத பொருளாதார உரையாடல் இருக்க வேண்டும் என்றார்.
இது 1973 இல் ஆரம்பிக்கப்பட்ட சரசவி புத்தக குழுமத்தின் 30 ஆவது கிளையையே அவர் திறந்து வைத்தார்.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்ததாவது:
ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் பிரபலமான பழைய மாணவர் பிரேமசிறி ஆவார். ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின தலைமுறையைச் சேர்ந்த சிலர் நம் நாட்டில் பல்வேறு துறைகளில் திறமைகள் மற்றும் புத்திசாலித்தனத்துடன் தேசத்திற்கு புகழ் சேர்த்துள்ளனர்.வர்த்தகத் துறையில் மிகச்சிறிய நிலையில் இருந்து தொடங்கி, பல இன்னல்களைச் சந்தித்து, பல்வேறு அவமானங்களையும், கேலிகளையும் சந்தித்து, தேசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெற்றிகரமான வர்த்தகதப் பயணத்தை மேற்கொண்ட தொழிலதிபராக அவரது பணியை நாங்கள் மதிக்கிறோம்.
இதுவரை புத்தக வெளியீட்டுத் துறையில் புத்தகங்களுக்கு வற் வரி கிடையாது. புதிதாக 18வீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளது என்று கூறும்போது, அதை ஊடகங்களில் விளம்பரம் செய்யும் விதம், பெரும் அழுத்தத்தை உருவாக்கும் விதத்தில் உள்ளது. வற் வரி முன்பு முந்தைய அரசாங்கத்தின் கீழ் 15வீதம் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் புத்தகங்கள் இலவச பொருட்கள் பட்டியலில் இருந்தன. இன்றும் அரிசி, காய்கறிகள், பழங்கள், தேயிலை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வற் வரி கிடையாது. பெறுமதி சேர் வரியின் பொருள் என்னவென்றால், மதிப்பு கூட்டப்பட்டால் மட்டுமே, அது வரி பொறுப்புக்கு உட்பட்டது.
புத்தகங்களுக்கு 18 வீதம் வற் வரி வசூலிப்பு புத்தகங்களை வாங்கும் போது உள்ளீட்டு செலவைக் கழித்த பிறகு பெறப்பட்ட தொகைக்கு வற் வரி செலுத்த வேண்டும். ஆனால் பிரச்சினை என்னவென்றால், புத்தகங்களுக்கு வற் வரி விதிக்கப்படும்போது, 60 மில்லியனுக்கும் அதிகம் என்றால் மாத்திரமே வரி பொறுப்பு உள்ளது, எனவே பெரிய அளவிலான 15 புத்தக வெளியீட்டாளர்கள் வற் வரிக்கு உட்பட்டுள்ளனர். பெரும்பாலான புத்தகக் கடை உரிமையாளர்கள் வற் வரி இல் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். இந்த நிலைமையை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விளக்கியுள்ளோம். நாம் அனைவரும், ஒவ்வொரு தொழிலதிபரும் ஒரு சிறிய அல்லது பெறுமதி சேர் வரியை செலுத்தினால் மட்டுமே வற் வரியின் சுமையை குறைக்க முடியும். அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டால், அவர்கள் செலுத்தும் வரிகளின் சதவீதம் குறையும். அப்போதுதான் இந்த நெருக்கடி தீரும். எமது நாட்டின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் இலங்கை அரசாங்கத்தினால் திரட்டப்பட்ட மொத்த வருமானம் 1751 மில்லியன். அதில் 1965 மில்லியன் அதாவது 72வீதம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.