121
மலையகத்தில் இலங்கை முதலுதவிச் சங்க தொண்டர்கள் அண்மையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18ஆவது வருட பூர்த்தியும் அறநெறி எழுச்சி நிகழ்வு மற்றும் மலையகம் -200 ஆன்மிக கௌரவம் நிகழ்வின் போதே, அவர்கள் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது, இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமய தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி வை.மோகனதாஸ், அதி உயர் விருதான ஸ்ரீசைவ ருத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சாவகச்சேரி விசேட நிருபர்