Tuesday, May 14, 2024
Home » மின்சாரம் தாக்கி பாடசாலை ஆசிரியர் பலி

மின்சாரம் தாக்கி பாடசாலை ஆசிரியர் பலி

by Gayan Abeykoon
January 17, 2024 4:10 am 0 comment

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தின் மரக்கறி தோட்டமொன்றில் மின்சாரம் தாக்கி  பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றும் பாமஸ்டன் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய கே.விஸ்வநாதனே சடலமாக மீட்கப்பட்டார்.

மின்சார கம்பியில் சிக்கிய நிலையில் இவர் காணப்பட்டதை அவதானித்த  உறவினர்கள், அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்திருந்ததாக,   வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக  மேலதிக விசாரணையை  தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT