Monday, April 29, 2024
Home » யெமன் ஹூத்திக்கள் மீது அமெ., பிரிட்டன் தாக்குதல்

யெமன் ஹூத்திக்கள் மீது அமெ., பிரிட்டன் தாக்குதல்

செங்கடலில் பதற்றம் அதிகரிப்பு

by gayan
January 13, 2024 6:14 am 0 comment

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து யெமனின் பல பகுதிகளிலும் வெடிப்புகள் இடம்பெற்றதை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஹூத்திக்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான் இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது. மறுபுறம் இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் என்று ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து பேசுவதற்கு உடன் பாதுகாப்புச் சபையை கூட்டும்படி ரஷ்யா கோரியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாக ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆளில்லா விமானங்கள், பளிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், ராடார் மற்றும் வான் கண்காணிப்பகம் ஆகிய ஹூத்திக்களின் திறன்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் சனாவுடன் சாதா மற்றும் தார், அதேபோன்று ஹுதைதா நிர்வாகப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஹூத்தி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலை “அமெரிக்க – சியோனிச – பிரிட்டன் ஆக்கிரமிப்பு” என்று வர்ணித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT