Sunday, April 28, 2024
Home » இறக்காமத்தில் குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் திட்டம்

இறக்காமத்தில் குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் திட்டம்

by damith
January 8, 2024 5:55 am 0 comment

நாட்டில் தற்போது பரவி வரும் சின்னமுத்து நோயை கட்டுபடுத்தும் வகையில், ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இறக்காமத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ்வரும் 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கடந்த சனிக்கிழமை(06) காலை 9.00 மணி முதல் இவ்வேலைத்திட்டம் ஆரம்பமாகின.

இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஆறு முதல் ஒன்பது மாத குழந்தைகளுக்கு, தடுப்பூசிகள் ஏற்ப்பட்டன. இந்நிகழ்வு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம்,என்,எப், றஸ்கா ஆஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாய்மார்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான பல்வேறு ஆலோசனைகளும் இங்கு வழங்கப்பட்டன.

(இறக்காமம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT