கம்பஹா பிரதேசத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டி பெரியாஸ்பத்திரியில் கம்பளையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா நோயினால் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அதன் பின்னர் மேலும் ஒரு கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகவீனமுற்ற பெண் ஒருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி. சி .ஆர் பரிசோதனையில் கொரோனா நியூமோனியாவே அந்த மரணத்துக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யக்கலைக்கு அண்மித்த பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 63 வயது பெண் ஒருவரே இவ்வாறு மரணம டைந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோரன்ஸ் செல்வநாயகம்