Saturday, May 11, 2024
Home » குழந்தைகள், தாய்மாருக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம்

குழந்தைகள், தாய்மாருக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம்

by Gayan Abeykoon
December 28, 2023 7:13 am 0 comment

திரிபோஷா சத்துணவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்த​மை காரணமாக எதிர்காலத்தில் புற்றுநோயாளார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக, முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண ஒரு அமைச்சரவை பத்திரத்தை அனுப்பியுள்ளதுடன், அதில் ஒரு மில்லியன் சோளம் தொகுதிக்கு 05 பாகங்களாக நிலவும் அதிகபட்சமான அஃப்லாடாக்சின் அளவை 10ஆக மாற்றுமாறு அமைச்சரவையிடம் அவர் கோரியுள்ளார். அதாவது குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும் திரிபோஷாவுக்கான இராசாயனத்தின் அளவை இரட்டிப்பாக்கும் கட்டுப்பாட்டுக்கு செல்லுமாறே கோரப்பட்டுள்ளது.

அதற்காக 198ஆம் ஆண்டு 26ஆம் இலக்க உணவு சட்டத்திலும் திருத்தம் செய்ய கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT