கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், தரமுகாமைத்துவப் பிரிவின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டு வரும், பிராந்தியத்திலுள்ள சுகாதார நிறுவனங்களின் தர மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்த சிறந்த ஊழியர்களைப் பாராட்டும் நிகழ்வு தொடர்பாக, கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் நிறுவன ரீதியான பாராட்டுவிழா அண்மையில் இடம்பெற்றது.
பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். எம்.என்.எம். தில்ஷான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டாக்டர் ஸக்கீலா இஸ்ஸடீன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். ஹில்மி மற்றும் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். எம்.ஸி.எம்.மாஹிர் ஆகியோரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரிவின் சிறந்த உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
எம்.ஐ.எம்.அஸ்ஹர் (மாளிகைக்காடு குறூப் நிருபர்)