Home » திருகோணமலை மாவட்ட இலக்கிய கலை பெருவிழா

திருகோணமலை மாவட்ட இலக்கிய கலை பெருவிழா

by sachintha
December 22, 2023 11:58 am 0 comment

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இலக்கிய கலை பெருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (19) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பாரம்பரிய கலை, கலாசார அம்சங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இக்கலை இலக்கிய பெருவிழா நடத்தப்பட்டது. இதன்போது நடனம், கதை கூறல், இசை ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், இதில் பாடசாலை மாணவர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் மாவட்ட மட்ட இலக்கியப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், திறந்த பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை தினகரன், தம்பலகாமம் குறூப் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT