திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்கான சுயதொழில் உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் பிரதேச செயலகத்தில் வைத்து இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சுயதொழில் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தலைமை முகாமையாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தம்பலகாமம் குறூப் நிருபர்