முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மாவட்டத்தில் 2105 குடும்பங்களைச் சேர்ந்த 6260 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 412 குடும்பங்களைச் சேர்ந்த 1215 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கமைய நேற்றுமுன்தினம் (19) மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 333 குடும்பங்களைச் சேர்ந்த 1076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு, கனகரத்தினபுரம், காதலியார்சமணங்குளம், பழம்பாசி, தண்டுவான், ஒட்டுசுட்டான், பேராறு, மணவாளன்பட்டமுறிப்பு, கணேசபுரம், முத்துவிநாயகபுரம், வித்தியாபுரம், அம்பகாமம், முத்துஐயன்கட்டுக்குளம் கற்சிலைமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 592 குடும்பங்களைச் சேர்ந்த 1748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, தண்ணீறூற்று கிழக்கு, கணுக்கேணி மேற்கு, அளம்பில் வடக்கு, மாமூலை, அம்பலவன்பொக்கணை, வண்ணாங்குளம், குமாரபுரம், முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு, அளம்பில் தெற்கு, உப்புமாவெளி,கேப்பாபுலவு மதவளசிங்கன்குளம், முள்ளியவளை மத்தி கொக்கிளாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 442 குடும்பங்களைச் சேர்ந்த 1338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம்,உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம், அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம், துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 251 குடும்பங்களைச் சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் குரூப் நிருபர்