தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ இடைமாறும் பாதையிலிருந்து இரு திசைகளிலும் (வெலிகம மற்றும் கனங்கே) செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வெலிகம நோக்கி சுமார் ஒன்றரை அடி ஆழமும் கனங்கே, வெலிகம இமதுவ வீதியை நோக்கி சுமார் நான்கு அடி ஆழமும் நீர் நிரம்பியுள்ளது.
இதனால், இதில் பயணிக்கும் சிறிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனினும்,பெரிய வாகனங்கள் தற்போது வெலிகம நோக்கி செல்லக் கூடியதாக உள்ளது. கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள், மத்தள பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாலட்டுவ இடைமாற்றுப் பாதை காரியாலயத்தையும் மற்றும் கொடகம இடைமாற்றுப் பாதை காரியாலயத்தையும் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்திஅதிகார சபை பணிப்பாளர் நாயகம் கேட்டுள்ளார்.