கொலன்ன தேர்தல் தொகுதி உல்லிந்துவாவ ஆற்றிலிருந்து 15 வயது பாடசாலை சிறுமியின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து பொதுமக்களின் உதவியுடன் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் க டந்த 8 ஆம் காணாமல் போனதாகவும், அதன் பின் நடத்திய தேடுதலின் போது இவரது சடலம் ஆற்றில் மிதந்து காணப்பட்டதாகவும், குறித்த சிறுமி அனில்கந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவி எனவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இவர் நீராடச் சென்று ஆற்றில் மூழ் கி மரணமடைந்தாரா அல்லது வேறு காரணங்கள் இவரது மரணத்துக்கு காரணமா என்பது குறித்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்